தேர்தல் வன்முறை: அசாமில் 6 பேர் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி:

இந்தியாவின் பதட்டம் மிகுந்த மாநிலமான அசாமில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 6 பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் கடந்த ஒரு மாதமாக நடந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

கவுஹாத்தியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திஹூ கிராமம். இங்கு ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதகும்பல் ஒன்று அசாம் கனபரிஷத் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அசாம் கன பரிஷத்கட்சித் தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இதே போல் இதே இடத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றுகண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில் அரசியல் கட்சித் தொண்டர்கள் 7 பேர் மற்றும் 3 போலீஸார்காயமடைந்தனர்.

இதற்கிடையே, சோனிட்பூர் மாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2உல்பா தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து ராணுவக் கமாண்டர் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள இந்நேரத்தில் உல்பா தீவிரவாதிகள்மாநிலத்தில் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து கையெறி வெடிகுண்டுகள், ஆயுதங்கள் ஆகியவைகைப்பற்றப்பட்டன என்றார்.

கோல்பாரா மாவட்டத்தில், கையெறி குண்டுகளுடன் சென்று கொண்டிருந்த உல்பா தீவிரவாதி, எதிர்பாராத விதமாகஅவர் வைத்திருந்த கையெறி குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+