கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் விழா கோலாகலம்
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டையருகே இருக்கும் கூவாகம் கிராமத்தில் அமைந்திருக்கும் கூத்தாண்டவர் கோவில்அலிகள் திருமண விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும்கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் வருடாவருடம் சித்திரை மாதம்அலிகள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. தினந்தோறும் கோவிலில் மகாபாரதசொற்பொழிவும் நடைபெற்றது.
அலிகள் திருமண விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.அலிகளுக்கு பூசாரி தாலி கட்டினார். அலிகள் தேங்காய்,பூ, பழம் போன்றவற்றை படைத்துகூத்தாண்டவரை வழிபட்டனர். பல ஆண்களும் வேண்டுதலின் பேரில் சேலை அணிந்து வந்து தாலி கட்டிக்கொண்டனர்.
அதன் பின்பு இரவு அலிகள் வட்டமாக கூடி நின்று விடிய விடிய கும்மியடித்து, கூத்தாண்டவர் சாமி பற்றிபாடினர்.இரவில் சாமிக்கு திருக்கண் திறக்கும் விழாவும் நடைபெற்றது.
திருமண விழாவுக்கு சேலம், பெங்களூர், கோவை. பெங்களூர், மும்பை,டெல்லி, கேரளா போன்றஇடங்களிலிருந்து அதிகமான அலிகள் வந்திருந்தனர்.
பணக்கார அலிகள் காரில் வந்தனர். சில அலிகள் கையில் செல்போனுடன் வந்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த அலிகள் திருமண விழாவை தொடர்ந்து, புதன்கிழமை தேர்த்திருவிழாநடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலிள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.