எங்கள் சாதனைக்கு கிடைத்த பரிசு: கருணாநிதி
சென்னை:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு எங்களது சாதனைகளுக்குக் கிடைத்த பரிசு என்றுதமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு திமுகதான் காரணம் என்றுஜெயலலிதாவும், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் பொய்ப்பிரச்சாரம் நடத்திய காரணத்தால்தான் திமுகவுக்குஇந்த அளவு தோல்வி கிடைத்துள்ளது.
இந்தத் தோல்வியை கடந்த 5 ஆண்டுகள் நாங்கள் செய்த சாதனைகளுக்குக் கிடைத்த பரிசாகத்தான் கருதுகிறோம்.
திமுகவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கருணாநிதி.
முன்னதாக, இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும்முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.