தலைவர்கள் சிலைகள், சமாதிகளில் ஜெ. அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள பல்வேறு தலைவர்களின் சிலைகள், சமாதிகளுக்குச் சென்றுமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முதல்வரான பின்னர் ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை, அண்ணா சிலை, ஜெமினியிலுள்ள பெரியார் சிலை ஆகியவற்றிற்குமுதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
சிலைகளுக்கு மாலை அணிவித்த பிறகு மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா சமாதி மற்றும் எம்.ஜி.ஆர்.சமாதிகளுக்கும் முதல்வர் ஜெயலலிதா சென்றார். அங்கு தலைவர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து அவர்அஞ்சலி செலுத்தினார்.
எழும்பூரில் உள்ள பெரியார் சமாதிக்கும் ஜெயலலிதா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் தம்பித்துரை, அய்யாறு வாண்டையார் ஆகியோரும் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications