19 ம் தேதி தொழிற்கல்வி நுழைவுத்தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமைவெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 படிப்பு முடிந்த பின் மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரவிரும்புவோர் அதற்காக தமிழக அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்த ஆண்டு நடைபெற்ற நுழைவுத் தேர்வில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 658 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்ததேர்வுகள் தமிழகம் முழுவதிலுமுள்ள 245 தேர்வு மையங்களில் நடைபெற்றன.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் 19ம் தேதி சனிக்கிழமை காலை முதல் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்திலும், பிற செய்திஇணையத்தளங்களிலும் வெளியிடப்படவிருக்கிறது.












Click it and Unblock the Notifications