For Daily Alerts
Just In
கைநாட்டு வைத்து பதவியேற்ற கேரள அமைச்சர்
திருவனந்தபுரம்:
பதவி ஏற்கும்போது, கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைநாட்டு வைத்தார் கேரளாவின் எம்.எல்.ஏ. ஒருவர்.
ஜேக்கப் என்ற அந்த அமைச்சருக்கு தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகட்சித் தொண்டர்கள் தாக்கிய காரணத்தால் வலது கை மற்றும் விரல்களில் காயம் பட்டது.
இதனால் வலது கை முழுவதும் அவர் கட்டுப் போட்டுக் கொண்டுதான் அவர் பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்தார்.
அமைச்சர் பதவி ஏற்கும்போதும், ரகசிய உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடும் போதும் அவர்கையெழுத்திடுவதற்குப் பதிலாக தன் இடதுகை பெருவிரல் கொண்டுதான் கைநாட்டு இட்டார்.
இந்தியாவிலேயே கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா. அதேபோல், இந்தியாவிலேயே கைநாட்டு இட்டுபதவி ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சரும் கேரள அமைச்சர்தான்!
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 17, 2001, 5:30 [IST]