டிராக்டர்-பஸ் மோதல்: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே டிராக்டருடன் பஸ் மோதியதில் 2 பேர் இறந்தனர்.
தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஒன்று, தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர்மாவட்டம் தேவையூர் பிரிவு ரோடு அருகே கரும்பு ஏற்றப்பட்டு நின்று கொண்டிருந்த ஒரு டிராக்டர் மீது இந்த பஸ்மோதியது.
இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனாட்சி (31) மற்றும் கண்டக்டர் குருநாதன் (35) ஆகியோர் அதே இடத்தில்இறந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 11 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications