தி.மு.க எம்.எல்.ஏ. கைது: பா.ஜ.க. கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நாளே எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினரை பொய் வழக்குப் போட்டு கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.கவுக்கு பாரதீய ஜனதாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியை, அத்தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் மற்றும் ஆதரவாளர்களைத் தாக்கியதாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் நாளே எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினரை பொய் வழக்கில் கைது செய்துள்ளதுஅ.தி.மு.க அரசு.
எந்தவித குற்றமும் செய்யாத பரிதி இளம்வழுதியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது, நியாயமில்லாதது. இந்தநடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications