For Daily Alerts
Just In
திருச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 குடிசைகள் நாசம்
திருச்சி:
திருச்சி, திருவெறும்பூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காந்தி நகரில்வியாக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
குடிசை ஒன்றில் எரிந்து கொண்டிருந்த ஸ்டவிலிருந்து வந்த தீப்பொறி குடிசையில் பற்றி கொண்டது. இதனால் அந்தகுடிசை எரிய ஆரம்பித்தது.
விரைவில் தீ அருகிலிருந்த குடிசைகளுக்கும் பரவியது. உடனே தீயணைப்புப் படையினருக்கு தகவல்கொடுக்கப்பட்டது. துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் வந்து 3 மணி நேரம்போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ரூ 5,00,000 மதிப்புள்ள பொருட்களும் அழிந்து போயினஎன தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]