ஆரணி அருகே பஸ்-லாரி மோதல்: 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆரணி அருகே வெள்ளிக்கிழமை காலை பஸ்ஸும் லாரியும் மோதிக் கொண்டதில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர்இறந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து சென்னையை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆரணி அருகே ஒரு லாரிமீது இந்த பஸ் பயங்கரமாக மோதியது.
இதில் 5 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 12 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications