வெயிலுக்கு பலியான கிளிகள்
சென்னை வெயிலுக்கு 2 கிளிகள் பரிதாபமாக இறந்தன.
சென்னையில் வெயில் கொளுத்தி வருகிறது. வெளியில் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்றவேண்டுகோளுடன்தான் அனைவரும் வெளியே செல்கின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நிலைமை மாறியது. 10 மணி வரை குளுமையான சூழ்நிலை நிலவியது.வெயிலையேக் காணவில்லை. 10 மணிக்கு மேல் வழக்கம் போல கொடும் வெயில் வந்தது. இந்த வெயிலுக்குபட்டினம்பாக்கம் பகுதியில் 2 ஜோடிக் கிளிகள் இறந்தன.
பட்டினப்பாக்கம் போலீஸ் ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியில் இந்த கிளிகள் இருந்தன. பிற்பகல் 12 மணிவாக்கில்இவை பறந்து கொண்டிருந்தன. அப்போது வெயில் தாக்கி கீழே விழுந்தன. மயக்கமடைந்த அவை இரண்டும்பரிதாபமாகச் செத்தன.
லவ் பேர்ட்ஸ் கிளிகள் இறந்தது அப்பகுதி மக்களுக்கு சோகத்தைக் கொடுத்தது.
இதற்கிடையே சென்னையில் மேலும் ஒரு நாளுக்கு வெயில் அதிகமாக இருக்காது என வானிலை ஆராய்ச்சிநிலைய இயக்குநர் சர்மா தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் முதியவர் பலி:
ராஜபாளையத்தில் வெயில் கொடுமைக்கு ஒருவல் பலியானார். ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்அருகில் நடந்து கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் யார்என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications