சென்னை கமிஷனராக முத்துக்கருப்பன் நியமனம்
சென்னை:
சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராகமுத்துக்கருப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காளிமுத்து சமூக நீதித்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முத்துக்கருப்பன் கமிஷனராகநியமிக்கப்படுவதற்கு முன்பு ஆயுதப்படை ஐஜியாக இருந்து வந்தார்.
புதிய கமிஷனர் பொறுப்பை உடனடியாக முத்துக்கருப்பன் ஏற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளைகமிஷனர் காளிமுத்து ஒப்படைத்தார்.
முத்துக்கருப்பன் ஏற்கனவே சென்னை நகர துணை கமிஷனராக இருந்தவர். பதவியேற்றுக் கொண்ட பின்செய்தியாளர்களிடம் முத்துக்கருப்பன் பேசுகையில், இந்தப் பதவியை ஏற்பதில் பெருமை அடைகிறேன்.ஏற்கனவே சென்னையில் பொறுப்பில் இருந்துள்ளதால் இங்கு கடமையாற்றுவது எளிதானதாகும். ரவுடிகள்அட்டாகாசத்தைக் குறைப்பதே எனது முதல் நடவடிக்கையாகும் என்றார்.
முத்துக்கருப்பன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம்படித்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.ஏ பட்டம் முடித்த அவர் 1980-ல் ஐ.பி.எஸ். அதிகாரியானார்.
மதுரையில் துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார். அதுதவிர பல்வேறு இடங்களிலும் உயர் பொறுப்புகளில்இருந்துள்ளார்.
முன்னதாக சென்னை நகர கமிஷனராக அலெக்சாண்டர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்ததுநினைவிருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு முத்துக்கருப்பன் நயமிக்கப்பட்டுள்ளார்.
காளிமுத்து மட்டுமின்றி வேறு சில அதிகாரிகளும் கூட மாற்றப்பட்டுள்ளனர். சென்னை நகர கூடுதல் போலீஸ்கமிஷனராக இருந்து வந்த பாலச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர். ஆனால் அவருக்குப் புதிய பொறுப்புஎதுவும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதேபோல, சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டி.ஜிபியாக இருக்கும் அலெக்சாண்டர் மாற்றப்பட்டு தமிழ்நாடுபோலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications