For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மின் பற்றாக்குறை வரும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வறு பிரச்சினைகள்தொடர்பாக தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் மின்வெட்டு வரவும் வாய்ப்புஅதிகமாகவுள்ளது.

நெய்வேலி மற்றும் தமிழகத்தின் பல்வேறு அனல் மின் நிலையங்களில் தொழிலாளர் பிரச்சினை பெரிதாகியுள்ளது.இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவை காரணமாக தமிழ்நாட்டுக்க வர வேண்டிய 700 மெகாவாட்மின்சாரத்தை இழப்பதாக தென் பிராந்திய மின் சுமை கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கல்பாக்கத்தில் 170 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி உலை, பிள்ளைபெருமாள் நல்லூர் தனியார் மின் உற்பத்திநிலையத்தில் 330 மெகாவாட் திறன் கொண்ட உலையும் தொழிலாளர் பிரச்சினை காரணமாக இயங்கவில்லை.

இந்தப் பிரச்சினை காரணமாக தமிழக மின்வாரியம், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனல் மற்றும் புனல் மின்நிலையங்களில் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

தொழிலாளர் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் மின் உற்பத்தி சீராகும் என்று தெரிகிறது. நெய்வேலி அனல் மின்நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X