தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பெய்யத் தொடங்கி விட்டது.
தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்த வெயில் கொடுமையைக் குறைக்கும் வகையில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, கொட்டிவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
திருவண்ணாமாலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாபநாசம், திருவையாறு ஆகிய பகுதிகளில் 8 செமீ அளவு மழை பெய்தது.
வழக்கமான காலத்திற்கு முன்பே தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதுதான் திடீர் மழைக்குக் காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கும்.












Click it and Unblock the Notifications