சேலம் மாணவி சென்னையில் மீட்பு
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பரிதவித்த சேலம் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம்ஒப்படைத்தனர் போலீஸார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் விஜயா, பத்தாவது வகுப்புத் தேர்வுஎழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துள்ளார்.
இதனிடையே, வீட்டில் வேலைகளை சரியாகச் செய்யாததால் விஜயாவை அவரது பெற்றோர் திட்டியதாகத்தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜயா, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
சேலத்திலிருந்து கிளம்பிய ஒரு ரயிலில் ஏறிய அவர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.ஆனால் அதற்குப் பிறகு எங்கு போவது என்று அவருக்குத் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அரசுபொது மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தபோது சிலர் அவரைக் கேலி செய்தனர்.
அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த முனுசாமி என்பவர், விஜயாவை மீட்டுதிருவள்ளூர் போலீஸ் எஸ்.பி.யிடம் கொண்டு போய்ச் சேர்த்து விஷயத்தைத் தெரிவித்தார். இதையடுத்து, சேலம்மாவட்ட போலீஸாருடன் திருவள்ளூர் போலீஸார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதன் பிறகு, விஜயாவின் பெற்றோர் சேலத்திலிருந்து கிளம்பி திருவள்ளூர் வந்தனர். அவர்களிடம் விஜயாஒப்படைக்கப்பட்டார். மகளுடன், விஜயாவின் பெற்றோர் நிம்மதியுடன் ஊருக்குக் கிளம்பிப் போயினர்.












Click it and Unblock the Notifications