மே. வங்கத்தில் 48 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான 48 பேர் கொண்ட அமைச்சரவைவெள்ளிக்கிழமை பதவியேற்றது. இவர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் விரேன் ஜீவன்லால் ஷா பதவி பிரமாணம்செய்து வைத்தார்.
இந்த மாதம் 10ம் தேதி நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலானகூட்டணி இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற்று அவர்கள் வெற்றி பெற்றனர்
வெள்ளிக்கிழமை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 பேர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 34 பேர் காபினெட் அமைச்சர்கள். 14 பேர் இணைஅமைச்சர்கள்.
பதவியேற்பு நிகழ்சியை எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்தது. தேர்தலின் போது ஆளும்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மம்தா பானர்ஜிதலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். சீதாராம் யெச்சூரி, ஹர்கிஷன் சிங் சுர்ஜித்,முன்னாள் மேற்கு வங்க முதல்வர் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி அரை மணி நேரம் நடந்தது.
வெள்ளிக்கிழமை பதவியேற்ற அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் புதியவர்கள். இவர்களில் 9 பேர் காபினெட்அமைச்சர்கள். சென்ற முறை இருந்த அமைச்சரவையை விட இந்த முறை 1 அமைச்சர் அதிகமாக இடம்பெற்றுள்ளார்.
அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுடன் உள்ள சிறு பிரச்சனைகாரணமாக அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுக்கு கால தாமதம் ஏற்படக் கூடும் என கூறப்படுகிறது.
இடது சாரி கட்சியினர் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது குறித்து வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனைநடத்துகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை எல்லா அமைச்சர்களுக்கான இலாகாக்களும் அறிவிக்கப்பட்டு விடும் எனஎதிர் பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில் நுட்பத்திற்கென புதிய அமைச்சகமும் அமைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications