For Daily Alerts
Just In
பாண்டிச்சேரி சட்டசபை கலைப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நடந்து வந்த 10வது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளதாக பாண்டிச்சேரி சட்டசபை செயலாளர்அறிவித்துள்ளார்.
இந்த மாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் த.மா.கா - காங்கிரஸ் கூட்டணி13 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவிருப்பதால், புதிய ஆட்சி அமையவுள்ளது.
பாண்டிச்சேரியில் சண்முகம் தலைமையிவான காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி இந்த மாதம் 16ம் தேதிகலைக்கப்பட்டது. இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பை சட்டசபை செயலர் சிவப்பிரகாசம் வெள்ளிக்கிழமைவெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாண்டிச்சேரியில் நடந்து வந்த 10வது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது எனகூறியுள்ளார்.
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]