ரவுடிகளை ஒடுக்குவேன்: சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன், ரவுடிகள் சாம்ராஜ்யத்திற்கு சாவு மணி அடிப்பேன்என்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னை கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் அவர் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில், நான்ஏற்கனவே சென்னை மக்களுக்கு அறிமுகமானவன்தான்.
சென்னையில் துணை கமிஷனராகவும், இணை கமிஷனராகவும் பதவி வகித்துள்ளேன். இந்தியாவிலேயே மிகவும்பழமை வாய்ந்தது சென்னை கமிஷனர் அலுவலகம்.
சென்னை நகர கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சென்னை நகரில் சட்டம் - ஒழுங்கு நிலையை சீர்படுத்துவேன். ரவுடிகளை ஒடுக்குவேன். சென்னை மக்கள்அமைதியாக வாழ வழி செய்து கொடுப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications