பா.ஜ.கவுடன் ஜெ. சேரமாட்டார் என்கிறார் வீரமணி
சென்னை:
பா.ஜ.கவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதால் ஜெயலலிதா பா.ஜ.கவுடன் சேர மாட்டார் என திராவிடர் கழகபொதுச் செயவாளர் வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், மதவாத கட்சியானபா.ஜ.கவுடன் கூட்டு வைத்துக் கொண்டதால் அதனை தோற்கடிக்க வலுவான கூட்டணி தமிழகத்தில்அமைக்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோர் இந்தகூட்டணியில் முக்கிய பங்கு வகித்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வென்றுள்ளது. சிலர் தொங்கு சட்டசபை வரும் என கூறி வந்தார்கள்.அது பொய்யாகி விட்டது. தமிழக மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஜெயலலிதாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைத்ததில் எந்த விதமான தவறும் கிடையாது.
தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், பாட்டாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் கருணாநிதி மீது ஆத்திரஅலை வீசியது. இதுவும் தி.மு.க.தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பலரது பெயரும் விடுபட்டிருந்ததால் பலரும் வாக்களிக்க முடியாமல்போனது. இது குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைக்கவேண்டும்.
திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத சமுதாய இயக்கம் என்றாலும், தமிழக அரசியலில் ஜாதிய வாதமும், மதவாதமும்தலை தூக்கிவிடக் கூடாது என்பதில் என்றுமே உறுதியாக இருந்து வருகிறது என்றார்.