For Daily Alerts
Just In
மதுரையில் எய்ட்ஸ் நோய்க்கு மாணவி பலி
மதுரை:
எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் சனிக்கிழமைஇறந்தார்.
ராகல்டடிவல் (26) என்ற அந்த மாணவி தன் கணவருடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தமிழ்ஆராய்ச்சி செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு எய்ட்ஸ்நோய் இருப்பது தெரிய வந்தது.
தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சனிக்கிழமை இறந்தார்.
Comments
Story first published: Tuesday, May 22, 2001, 5:30 [IST]