ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம்: பா.ஜ.க.
சென்னை:
திமுகவைப் போல பாரதீய ஜனதாக் கட்சி ஆளுநர் உரையைப் புறக்கணிக்காது என்று தமிழக பாஜக செயலாளர்எச்.ராஜா கூறியுள்ளார்.
சட்டவிதிகளுக்குப் புறம்பாக ஜெயலலிதாவை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததால் சட்டசபையில்ஆளுநர் உரையை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா கூறுகையில், மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பேன் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். திமுகவைப் போல நாங்கள் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கமாட்டோம் என்றார்.
எம்ஜிஆர் அதிமுக சட்டசபை கட்சித் தலைவர் ஆஸ்டின் கூறுகையில், ஆளுநர் உரையில் கலந்து கொள்வது குறித்துகட்சிக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
தமாகா ஜனநாயகப் பேரவை எம்எல்ஏ ரங்கநாதன் கூறுகையில், திமுகவைத் தொடர்ந்து நாங்களும் ஆளுநர்உரையைப் புறக்கணிப்போம் என்று கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், உதயசூரியன் சின்னத்தில் நாங்கள்போட்டியிட்டோம். இருப்பினும் எங்களுக்கென்று தனித்தன்மை உண்டு. திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசிமுடிவெடுப்போம் என்றார் அவர்.
திமுக முடிவுக்கு ஆதரவாக ஓரிரு கூட்டணிக் கட்சிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திட்டவட்டமாகநாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று முக்கிய தோழமைக் கட்சியான பாஜக கூறி விட்டது. இந்நிலையில்பிற கட்சிகள் திமுக முடிவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுமா என்பது விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications