For Quick Alerts
For Daily Alerts
Just In
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் பரிதி இளம்வழுதி
சென்னை:
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் எழும்பூர் தொகுதிதிமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கலந்து கொள்ள மாட்டார்.
வேட்பாளர் ஜான் பாண்டியனுடைய ஆதரவாளர்களைத் தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுவேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பரிதி இளம்வழுதி. இதனால் அவரால் பதவிப்பிரமாணம்எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வேறொரு நாளில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது. பதவிப்பிரமாணம்எடுத்துக் கொள்ளாமல் எந்த எம்.எல்.ஏவும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, May 22, 2001, 5:30 [IST]