சட்டசபை கூடியது .. கருணாநிதி வரவில்லை
சென்னை:
தமிழகத்தின் 12-வது சட்டசபை முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை கூடியது. புதிய எம்.எல்.ஏக்கள்பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
11-வது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அடுத்த சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கானதேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைமத்துள்ளது.
12-வது சட்டசபை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. புதிய உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமைபதவியேற்றுக் கொண்டனர். காலை 10.30 மணிக்கு தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் புதிய உறுப்பினர்களுக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தொடங்கினார்.
முதலில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் கட்சித்தலைவர்கள், சபாநாயகராக பதவியேற்கவுள்ளகாளிமுத்து மற்றும் பிற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சபைக்கு காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதா வந்து விட்டார். முன்னாள் முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதி சபைக்கு வரவில்லை. மற்ற தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
ஜெயலலிதா 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார். முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படஅமர்ந்திருந்த அவருக்கு எதிரேயிருந்த எதிர்க்கட்சி வரிசையில், கருணாநிதி காணப்படாதது அ.தி.மு.கஉறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.
தி.மு.க உறுப்பினர் பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சபைக்கு வரவில்லை.
அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செம்மலை ஆகியோர் டெல்லி சென்றிருப்பதால் அவர்களும் சபைக்கு வரஇயலவில்லை. இந்த 3 உறுப்பினர்களும் பின்னர் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் கடைசியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முன் தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப்பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிய ஒத்துழைத்த காவல்துறையினர், தேர்தல்அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எம்.எல்.ஏக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.