காங்கிரஸ் அலுவலகம் தரைமட்டம்: சேலத்தில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் அருகே காங்கிரஸ் அலுவலகம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஊராட்சி மன்றத் தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மன்னார்பாளையம் உள்ளது. இங்கு கடந்த 37 ஆண்டுளுக்கு முன்னர் ஒரு காங்கிரஸ் கட்சிஅலுவலகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை தற்போது ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ள சக்திவேல்இடித்துத் தள்ளி விட்டார். ஆக்கிரமிப்பைக் காரணம் காட்டி இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கந்தசாமி, பழனிச்சாமிக் கவுண்டர், வைத்தியலிங்கம்ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 1960ம் ஆண்டு மன்னார்பாளையத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இடம் வாங்கப்பட்டது.

இந்த இடத்தில் 900 சதுர அடியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு 64 ம் ஆண்டு அது திறக்கப்பட்டது. கடந்த 37ஆண்டுகளாக இந்த இடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டார் ஊராட்சிமன்றத் தலைவர் சக்திவேல்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும், மாவட்ட கலெக்டரைச் சந்தித்து நேரடியாகப் புகார் தெரிவித்தும்பலனில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம்என்றனர் அவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+