For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக - பாண்டி. மீனவர்கள் மோதல்: 10 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

தமிழக-பாண்டி. மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட போராட்டத்தில் 10 மீனவர்கள் காயமடைந்தனர்.

தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். எனவே 45 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள்மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இதனால் பாண்டிச்சேரி மற்றும் தமிழகமீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தின் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காரைக்கால்கடல்பகுதிக்கு சென்று மீன் பிடித்தார். கட்டுப்பாட்டை மீறி மீன் பிடித்ததால் தரங்கம்பாடி மீனவரின் மீன்பிடி படகைகாரைக்கால் பகுதி மீனவர்கள் சிறை பிடித்தனர்.

இதை தரங்கப்பாடி மீனவர் தனது சக மீனவர்களிடம் வந்து கூறினார். இதனால் கோபமடைந்த தரங்கம்பாடிமீனவர்கள் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பல படகுகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன்காரைக்கால் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்த மீனவர்களை தாக்கினர்.

அவர்களும் பதில் தாக்குதலில் இறங்கியதால் அங்கு கடும் மோதல் நிலவியது. இதில் 10 பேர் படுகாமடைந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக காரைக்கால் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. மேலும்கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X