ஜெ. தலைமையில் அமைச்சர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி
சென்னை:
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஜெயலலிதா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான மே 21ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாகஅனுஷ்டிக்கப்படுகிறது. திங்கள்கிழமை மே 21ம் தேதி என்பதால் அது பயங்கரவாத எதிர்ப்பு தினமாகஅனுஷ்டிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் இருக்கும் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் மறைந்த முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்படிருந்தது,
ஜெயலலிதா வந்தபின் அவர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை வாசித்தார். அதை தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், தலைைமைச் செயலாளர் முத்துசாமி மற்றும் அரசு அதிகாரிகள் வழி மொழிந்தனர்.