வெற்றி விழா கிடையாது .. ஜெ. அறிவிப்பு
சென்னை:
அ.தி.மு.க கூட்டணியின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெற்றி விழா எதுவும் நடத்தப்படமாட்டாது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்தபேட்டியில், அ.தி.மு.கவின் வெற்றியை சாதாரண முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். வெற்றிவிழா எதுவும் திட்டமிடப்படவில்லை.
அ.தி.முக. எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நன்றி கூறும் கூட்டங்களை நடத்துமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சட்டசபையில் ஆளுநர் உரையைப் புறக்கணிக்க எதிர்க்கட்சியான தி.மு.க. முடிவு செய்திருப்பது வருத்தம்தருகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல என்று கூற விரும்புகிறேன்.
பாண்டிச்சேரியில் முதல்வர் பதவிக்கு ப.சண்முகத்தை நாங்கள் பரிந்துரை செய்யவில்லை. மேலும் ஆட்சியிலும்பங்கு தருமாறு அவர்களிடம் கோரவில்லை. சண்முகத்தை தேர்வு செய்தது முழுக்க, முழுக்க காங்கிரஸ்கட்சியின் சுதந்திரமான நடவடிக்கை. இதில் அ.தி.மு.கவுக்குத் தொடர்பில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications