மாடியிலிருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
மொட்டை மாடியிலிருந்து தவறிக் கிழே விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.
நாமக்கல் அருகே வளத்தி என்ற இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தகல்லூரியில் இன்ஜினியரிங் முதலமாண்டு படித்து வருபவர் பத்மநாபன்.
இவர் நண்பர்களுடன் விடுதியில் மேல் உள்ள மொட்டைமாடியில் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு மின்சாரம் தடைபட்டது.
எனவே அனைவரும் கீழே இறங்கிச் செல்ல முயன்றனர். அப்போது மொட்டை மாடியிலிருந்து தவறி பத்மநாபன்கீழே விழுந்தார்.
அவர் தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications