மின் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம காரணமாகமுதலாவது அனல் மின் நிலையத்தில் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் விதிப்படி வேலை என்ற போராட்டத்தை நடத்திய அவர்கள்தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிலையத்தில் பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது. இங்கு 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, நெய்வேலி மின் நிலைய பொறியாளர்களை வைத்து நிலைமையை சமாளிக்க மின் நிலையநிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பொறியாளர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்துபொறியாளர்களை வைத்து மின் உற்பத்தியை மேற்கொள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.

நெய்வேலியில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும்பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+