தி.மு.கவின் காழ்ப்புணர்ச்சி .. பா.ம.க. புகார்
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க தொழிற்சங்கத்தினர்நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு வர முயல வேண்டும் என்று பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெய்வேலியில் அனல் மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை முடிவுக்குக் கொண்டு வர பாமகதலைவர் டாக்டர் ராமதாஸ் ஆர்வமாக உள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைக்காக போராடியிருக்க வேண்டும்.ஆனால் தி.மு.க சார்பிலான தொழிற்சங்கம் என்பதால், இத்தனை நாள் சும்மாயிருந்து விட்டு, அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்துள்ள நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. தொழிற்சங்கத்தின் இந்தப் போக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக அமைந்துள்ளது. தென்மாநிலங்கள் முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவேதி.மு.க. தொழிற்சங்கத்தினர், நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒத்துழைக்கவேண்டும் என்றார் ஜி.கே.மணி.