மின்வாரிய தலைவர் திடீர் மாற்றம்
சென்னை:
தமிழக மின்சார வாரியத் தலைவர் பூரணலிங்கம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஞானதேசிகன்அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழக மின்சார வாரியத் தலைவராக பூரணலிங்கம் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் இடமாற்றம்செய்யப்பட்டு அவருக்குப் பதில் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். பூரணலிங்கத்திற்கு வேறு பொறுப்பு ஏதும்கொடுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலின் கீழ் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
ஞானதேசிகன், இதற்கு முன்பு தமிழக மின்னணுக் கழகத் தலைவராக இருந்தார்.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றபோது சென்னை முழுவதும் திடீரென மின்சாரம்தடைபட்டது. அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஆதரவான ஆதரவாளர்கள்தான் இதற்குக்காரணம் என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் பூரணலிங்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.