பரிதி இளம்வழுதி மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழும்பூர் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி, வாந்தி, மயக்கம்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களைத்தாக்கியதாக பரிதி இளம்வழுதி மீது போலீஸில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரிதி இளம்வழுதிக்கு திங்கள்கிழமை பிற்பகல் திடீரென வாந்தியும்,மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பரிதிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அவருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டிருப்பதாக போலீஸார்தெரிவித்தனர். மேலும் டாக்டர்களிடம் பரிதி கூறுகையில், சிறுநீர் கழிக்கும்போது வலிப்பதாகவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+