28 ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை:
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சென்ற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை ப்ளஸ் 2 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு 287 மையங்களில்நடந்தது. 4 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வுதாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. இந்த முறை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில்கம்ப்யூட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த முறை டம்மி நம்பர் போன்றவை விடைத் தாள்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள்தாமதமாவதாக கூறப்படுகிறது.
இந்த மாதம் 22ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. புதிய தொழில்நுட்பம்அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தெரிகிறது.
ஆனாலும் தேர்வு முடிவுகள் என்று வெளியாகும் என்பது குறித்து எந்த விதமான அதிகாரமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.