சிலி நாட்டில் 28 சிறைக்கைதிகள் படுகொலை
சிலி:
சிலி நாட்டில் சிறைத்துறை அதிகாரிகளுக்கும், சிறைக்கைதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 28சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். 150 க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சிலி நாட்டில் அடிகா என்ற சிறையில் கைதி ஒருவர் கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து பிற சிறைகளில் உள்ள கைதிகள் போராட்டத்தில் குதித்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்கைதிகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நல்ல உணவுகள் வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தினர்.
இதனால் சிலி நாட்டில் உள்ள பல சிறைகளில் கலவரம் வெடித்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இக்யூப் என்றஇடத்தில் உள்ள சிறையில் சிறைக் காவலாளி ஒருவர் சிறைக்கைதிகளால் தீ வைத்துக் கொலை செய்யப்பட்டார்.அப்பகுதி முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறை நிர்வாகத்தாருக்கும், சிறைக் கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் 28 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். 150 க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்தனர்.
சிலி நாட்டு சிறைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம்நீடிக்கிறது.
யு.என்.ஐ.