ஜெ. பதவிப்பிரமாணம்: ஆளுநரை சாடுகிறார் சுவாமி
மதுரை:
ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவி பிரமாணம் செய்து வைத்தது ஜனநாயக படுகொலை அவர் அதுகுறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது சுவாமி கூறுகையில், முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனது மனுவுக்கு தமிழக அரசு ஆதரவுஅளிக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி நினைவு தினமான திங்கள்கிழமை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ராஜீவ் காந்திகொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்களைகைது செய்யுமாறு சோனியா காந்தி இதுவரை கூறவில்லை.
5 மாநில தேர்தல் முடிவு காரணமாக மத்திய அரசில் மாற்றம் வருமா என தெரியவில்லை. ஆனால் வாஜ்பாய்ராஜினாமா செய்ய வேண்டும். சோனியா காந்தி இல்லாத காங்கிரஸ் உருவாக வேண்டும்.
தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற முடியாது. பாலகிருஷ்ண பிள்ளை வேட்புமனு ஏற்கப்பட்டபோது ஆட்சேபம் செய்தனர். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய மறுக்கப்பட்டு விட்டது. இங்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்.
டான்சி வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டால்தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யமுடியும்.அவர் மனு தாக்கல் செய்தால், அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி வேட்பு மனு பரிசீலனையின் போது நான்வாதாடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications