For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமைக்கும் பாசத்துக்கும் இடையே ஒரு போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிள்ளையைக் கோவிலில் விட்டுச் சென்ற தாய், மீண்டும் அக்குழந்தையை தேடிமருத்துவமனை ஒன்றிலிருந்து மீட்டுச் சென்றார்.

திருப்பூர் காமட்சியம்மன் கோயில் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனாதையாக விடப்பட்ட ஒருபெண் குழந்தைதையைப் பொதுமக்கள் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பராமரிப்பிற்காககுழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வியும் அவரது மாமியார் தங்கம்மாளும் திருப்பூர்மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை கேட்டனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு செல்வியிடம்குழந்தையை ஒப்படைத்தனர்.

தவிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய் செல்வி கூறும்போது, பால் வாங்கித் தரக் கூட காசு இல்லாத நிலையில்குழந்தையை கோயிலில் விட்டுச் சென்று விட்டேன்.

வறுமையில் வாடும் எங்களுக்கு யாரும் உதவவில்லை. எனவே, மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையைவிட்டு விட்டு வந்தேன். பின்னர், குழந்தையைப் பிரிந்து இருக்க முடியாமல், மீண்டும் வந்து விசாரித்தேன்.குழந்தை மருத்துவமனையில் இருப்பதை அறிந்து பெற்றுக் கொண்டேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X