மூப்பனார் - திருமாவளவன் திடீர் சந்திப்பு
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரைசந்தித்துப் பேசினார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, திமுக கூட்டணியில் இணைந்துபோட்டியிட்டது.
திருமாவளவன் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் திமுக கூட்டணி படுதோல்விஅடைந்தது.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மூப்பனார் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலைதிருமாவளவன் சென்றார். இருவரும் அரை மணி நேரம் பேசினர்.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் பேசியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அதனால் அவரை சந்தித்துப்பேசினேன்.
அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. சட்டசபையில் திமுகவுடன் சேர்ந்து சிறந்த எதிர்க்கட்சியாகச்செயல்படுவோம்.
தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அதிமுக அரசு கலைத்து விட்டது. கூட்டுறவு சங்கங்களில் அதிக அளவுதிமுகவினர் இருப்பதால்தான் சங்கங்கள் கலைக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications