வேலூரில் மீண்டும் ரயில்களில் கொள்ளை
சென்னை:
வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரயில்களில் கொள்ளை அடிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி ரயில்களை நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 2 ரயில்களில்இதுபோல கொள்ளை அடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டன. ரயில்வே ஐ.ஜி. திலவதி வேலூரில் முகாமிட்டு கொள்ளையர்களைப் பிடிப்பதற்கானநடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12 மணியளவில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ளமேளக்காரன்பட்டி என்ற இடத்தில் 2 ரயில்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேளக்காரன் பட்டி ரயில் நிலையம் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் வந்துகொண்டிருந்தன. அப்போது ரயில் நிலையத்திற்குள் நுழைய சிக்னல் கிடைக்காததால் இரு ரயில்களும்நிலையத்திற்கு வெளியே நின்று விட்டன.
அந்த சமயத்தில், திடீரென கொள்ளைக் கும்பல் இரு ரயில்களுக்குள்ளும் புகுந்தது. அங்கிருந்த பயணிகளை மிரட்டிநகை, பணம் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டனர். பின்னர் ரயில்களிலிருந்து தப்பிச் சென்றனர்.
மீண்டும் ஒரு ரயில் கொள்ளை நடந்திருப்பதால் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம்நடந்த மேளக்காரன்பட்டிக்கு ஐ.ஜி. திலகவதி விரைந்து சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications