மூத்த காங். தலைவர் பா.ராமச்சந்திரன் மறைவு
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரான கேரள மாநில முன்னாள் ஆளுநர் பா.ராமச்சந்திரன் (81) சென்னையில்புதன்கிழமை காலமானார்.
ஸ்தாபன காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த பா.ராமச்சந்திரன், தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்துமுப்பனார் உள்ளிட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த போதும் அதில் சேராமல் தொடர்ந்து ஸ்தாபனகாங்கிரஸில் செயல்பட்டு வந்தார்.
1974ம் ஆண்டு ஜனதாக் கட்சியுடன் தனது ஸ்தாபன காங்கிரஸை இணைத்தார். அதன் பின்னர் மொரார்ஜி தேசாய்அமைத்த ஜனதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பா.ராமச்சந்திரன். இதுதவிர பல்வேறுபொறுப்புகளிலும் இருந்தார். கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்துஅவர் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். புதன்கிழமை அதிகாலை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்பா.ராமச்சந்திரன் இறந்தார்.
பா.ராமச்சந்திரன் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.












Click it and Unblock the Notifications