For Daily Alerts
Just In
ஆளுநர் உரையை புறக்கணிக்கிறது எம்.ஜி.ஆர். அதிமுக
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுகவும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி 8 பிரிவு 3-ன் கீழ் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஏற்கனவே பெற்றுள்ளதண்டனையால் தடை விதிக்கப்பட்டுள்ளவர் ஜெயலலிதா.
அது மட்டுமின்றி, தேர்தலின்போது 4 இடங்களிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர் அவர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவரை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், சட்டசபையில் அவர் ஆற்றவிருக்கும் உரையைப் புறக்கணிப்பதென எம்.ஜி.ஆர். அதிமுகசார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]