சீனாவுக்-கு "ஸ்பெ-ஷல்" கவ-னிப்-பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்-டம்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் மனோஜ் பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களிடமும்விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தனக்கு ரூ. 25 லட்சம்லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முயன்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3ஆண்டுகளுக்கு முன் கபில் தேவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்த பிரபாகர், புதன்கிழமை பகிரங்கமாக கபிலின்பெயரை அறிவித்தார்.
எனக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தியை அஜித் வடேகர், அசாருதீன், கவாஸ்கர், ரவி சாஸ்திரி,சித்து, பிரசாந்த் வைத்யா, மோங்கியா ஆகியோருக்குத் தெரியும் என்று பிரபாகர் தெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தற்போது விசாரித்து வரும் சிபிஐ, பிரபாகர் குறிப்பிட்ட மேற்கண்ட நபர்களிடம்விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கபிலிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ விசாரணைக்குழுத் தலைவர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.
ஏற்கெனவே சித்து மற்றும் அஜித் வடேகரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும், பிரபாகரின் தகவல்புதன்கிழமை வெளியானதை அடுத்து அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கபில் தேன் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது குறித்து என்னிடம் பிரபாகர் கூறியது உண்மைதான் என்றும்,அதற்கு உடனே கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பிரபாகரிடம் கூறினேன் என்றும் ரவி சாஸ்திரிகூறியுள்ளார்.
ஆனால், பிரபாகருக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது பெயரைபிரபாகர் எவ்வாறு குறிப்பிட்டார் என்றும் தெரியாது என்று வைத்யா கூறியுள்ளார்.
இதற்கிடையே, தன் மீது பிரபாகர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எதையும் மிகைப்படுத்தவேண்டும் என்றுபத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சிபிஐவிசாரணை முடியும் வரை மவுனம் காக்கும்படி அவர் கூறியுள்ளார்.
என்னைப் பொருத்துவரை நான் குற்றம் செய்யவில்லை. ஒரு திட்டமிட்ட சதியில் நான் சிக்கியுள்ளேன். சிபிஐவிசாரணையில் உண்மை வெளிவரும். தேச நலனில் அக்கறையுள்ள நான் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையில்ஈடுபடமாட்டேன் என்றார் கபில் தேவ்.
இந் நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி இனிமேல் யாரும் எதையும் கூறவேண்டும். அது பற்றி விசாரணைநடத்தி வரும் சிபிஐக்குத் தான் எந்த வித தகவலையும் தெரிவிக்க அதிகாரம் உள்ளது என்று இந்திய அணியின்முன்னாள் பயிறசியாளர் அஜித் வடேகர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications