திண்டுக்கல் அருகே பஸ்-லாரி மோதல்: 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பழநி:
திண்டுக்கல் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேர்உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து வியாழக்கிழமை காலை பழநிக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50பயணிகள் இருந்தனர்.
இதற்கிடையே, வடமதுரை அருகே முள்ளிப்பட்டியில் கரி பாரம் ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்தது.
இந்த லாரி மீது அரசு பஸ் மோதியது. இந்த பஸ், நின்றிருந்த லாரி மோதியது. இதில் டிரைவர் சண்முகசுந்தரம்,கண்டக்டர் வீரபாபு, திருச்சியைச் சேர்ந்த தமிழரசி ஆகியோர் இறந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தசம்பவம் குறித்துபோலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications