ஜெ.வுக்கு எதிரான வழக்கு: 4 ம் தேதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றது தவறு என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்குகள் மீதான விசாரணை வரும் ஜூன் 4 ம் தேதி நடக்கவுள்ளது.

தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஜெயலலிதாவின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.அதையும் மீறி அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதை எதிர்த்து பொது நலன் கருதி வக்கீல்கள் மனோகர் லால் சர்மா மற்றும் கபூர் ஆகியோர் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனுவில், எம்.எல்.ஏ.வாகவே இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது தவறு.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒரு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில்போட்டியிட முடியாது.

அப்படியிருக்கும்போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதற்கே அனுமதியளிக்கப்படவில்லை. அதனால்அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது தவறு என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் மாதம் 4 ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு சுப்ரீம்கோர்ட்டில்தொடர்ந்துள்ள பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+