நெய்வேலி .. இன்று 4-வது சுற்று பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கும், அனல் மின் நிலைய தலைவர்ஏ.கே.சஹாய்க்கும் வெள்ளிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

நெய்வேலியில் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஊதிய விகித திருத்தம் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 4-வது நாளாக வெள்ளிக்கிழமை தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், நெய்வேலி அனல் மின் நிலையநிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நெய்வேலி மின் நிலைய தலைவர் ஏ.கே.சஹாய்கலந்து கொள்கிறார். பேச்சுவார்த்தையில் இப்போதுதான் முதல் முறையாக சஹாய் கலந்து கொள்வதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பேச்சுவார்த்தையை இழுத்தடிக்காது, விரைவில் உடன்பாட்டை எட்டக் கோரி நிர்வாகத்தைவலியுறுத்தி 5 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் சனிக்கிழமை முதல் மறியல்போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

நெய்வேலியில் தொழிலாளர்கள் போராட்டத்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+