ஊட்டி சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
ஊட்டி:
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வரும் மே 27ம் தேதி பழக் கண்காட்சி நடக்கிறது. இதையொட்டி சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பழமை வாய்ந்தது குன்னூர் சிம்ஸ்பார்க். இந்தப் பூங்கா 1874ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. 30 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 18 லட்சம் செலவில்புதுப்பிக்கப்பட்டது.
குன்னூர் சிம்ஸ்பார்க்கைப் பொறுத்த வரை இரண்டு விதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இங்கு ஊட்டியின்குளிரான சூழ்நிலையும், மேட்டுப்பாளையத்தின் தரைப் பகுதிச் சூழ்நிலையும் இணைவதால் இதமான தட்ப வெப்பநிலவுகிறது.
எனவே இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். சிம்ஸ்பார்க்கில் 80 வகையான மலர்கள்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடக்கும் பழக்கண்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இங்கு நடக்கும் இந்தப் பழக் கண்காட்சிப் போட்டியில்பெற்றி பெறுவோர்க்கு 10 சுழற்கோப்பைகள் வழங்கப்படுகிறது. 120க்கும் மேற்பட்ட பரிசுகளும் வழங்கப்படுகிறது.
எனவே இங்கு பழக்கண்காட்சி நடத்த பழங்கள் குவியும். மே.27ம் தேதி இந்தப் பழக் கண்காட்சி துவங்குகிறது.அதுவரை போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பழக்கண்காட்சியையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications