ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
கோவை:
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை, போத்தனூர் அருகே உள்ள தண்டவாளத்தில் இருவரின் உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
இவர்கள் இருவரும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது உடல்களைக் கைப்பற்றியபோலீசார், ஆணின் சட்டைப் பையில் இருந்த கடிதத்தை எடுத்தனர்.
அதில் செந்தில்குமார்- விமலா எனவும், அவர்கள் கிணத்துக் கடவு அருகே உள்ள மன்றாம்பாளையத்தைச்சேர்ந்தவர்கள் எனவும், தெரிய வந்தது. இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பதியர் சாவு:
சைக்கிளில் பயணம் செய்த தம்பதியர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.
கோவை அருகே சேயூர் உள்ளது. இங்கு அவிநாசி ரோட்டில் கருவம்பாளையத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரியாகப்பன் (40), மனைவி சாந்தாமணி (35) ஆகியோர் சைக்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.