டெல்லியில் குரங்கு மனிதன்..அசாமில் கரடி மனிதன்
நல்பாரி:
அசாமின் சில கிராமங்களில் இப்போது "கரடி மனிதன்" தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளான்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் டெல்லி நகரத்தையை கலக்க ஆரம்பித்தான் ஒரு "குரங்கு மனிதன்". மக்கள் இந்தச்செய்தியை மறப்பதற்குள், அசாமில் "கரடி மனிதன்" தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன.
கரடி போன்ற ஒரு மிருகம் தங்களைத் தாக்கி, நகங்களால் தங்கள் உடம்பைக் கீறி விட்டது என்று, இதுவரைகுறைந்தது 20 பேருக்குமேல் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக, பூட்டிய வீட்டுக்குள்ளேயே எப்படியோ புகுந்து இந்தக் "கரடி" எங்களைத் தாக்கிச் சென்றுவிடுகிறது என்று கூறினார்கள் அந்த மக்கள்.
அசாமின் மேற்குப் பகுதியில் உள்ள நல்பாரி மற்றும் பார்பீடா மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களில்தான்இந்தக் "கரடி மனிதன்", மக்களைத் தாக்க ஆரம்பித்துதள்ளான்.
இதனால், டெல்லி மக்களைப் போன்றே, பெரிய பெரிய கம்புகளுடனும், அம்புகளுடனும் "கரடி மனிதன்"வேட்டையில் மக்கள் இறங்கியுள்ளனர்.
"கரடி மனிதன்" விஷயத்தை நம்ப முடியாவிட்டாலும், மக்களுடைய இந்தப் பய உணர்ச்சியைஅலட்சியப்படுத்திவிட முடியாது என்று கூறிய அம்மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர், "கரடி மனிதனை"க்கண்டுபிடிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தையும், காவல் துறையினரையும் முழுவீச்சில் ஈடுபடுத்தியுள்ளதாகக்கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications