தீவிரவாதிகளை ஒடுக்க பாஜக ஆதரவு
சென்னை:
தீவிரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் எந்த ஒரு சரியான செயலுக்கும் பாஜக ஆதரவுகொடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறினார்.
கவர்னர் உரை பற்றி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தந்திருந்த வாக்குறுதிகளே ஆளுநர் உரையாக அமைந்துள்ளன. இவை எந்தஅளவு செயல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கதமிழக அரசு முனைந்து செயல்பட வேண்டும்.
ஓரிரு இடங்களில் மட்டுமே மின் வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாமல் போய்விட்டது. இதற்காக, இதை அதிமுகஎதிர்ப்பது சரியல்ல.
நகர்ப்புற மக்களுக்கு உழவர் சந்தை பயனுள்ளதாகவே செயல்படுகிறது. ஓரிரு இடங்களில் குறைபாடுஇருக்குமானால், அதை சரி செய்ய வேண்டுமே ஒழிய முற்றிலும் அதை நீக்குவது சரியல்ல. இதுகுறித்து அரசுமறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளை ஒடுக்க அரசு எடுக்கும் எந்த ஒரு சரியான செயலுக்கும் பாஜக தன்னுடைய முழு ஆதரவையும்கொடுக்கும் என்று இல. கணேசன் கூறினார்.