பஸ் நிலையத்தில் புகுந்த யானை: பீதியில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை,:

பஸ் நிலையம் மற்றும் செக் போஸ்டில் புகுந்த ஒற்றை யானையால் திடீரென பதட்டம் ஏற்பட்டது. மக்கள்அலறியடித்துக் கொண்டு ஓடி ஒளிந்தனர்.

கடந்த சில நாட்களாவே கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள்அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வெள்ளியன்று காட்டுக்குள் இருந்த ஒரு யானை ரோட்டில் நடந்து வரத்தொடங்கியது.

கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள ஆனைகட்டி கிராமத்தில் உள்ள செக் போஸ்ட் பகுதியில் இந்தயானை வந்தபோது, அங்கிருந்த அனைவரும் பீதியில் உறைந்தனர். அந்த யானை ஒற்றை யானையாக வந்ததால்,மதம் பிடித்த யானையாக இருக்கலாம் என மக்கள் அஞ்சினர்.

எனவே, கடைகள் மற்றும் செக் போஸ்ட் ஆகியவற்றின் கதவுகளை இழுத்து மூடி விட்டு யாரும் வெளியில் தலைகாட்ட வில்லை. அரை மணிநேரத்திற்குப் பிறகு யானை சென்றது. அதன் பின்னரே மக்கள் நிம்மதிப் பெரு மூச்சுவிட்டனர்.

இன்னும் சில இடங்களில் இந்த யானைகள் மக்களின் குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளது. வீட்டின் ஓடுகளைஉடைத்து நாசப்படுத்தியது. சில இடங்களில் மின்வேலிகள் போடப்பட்டிருந்தாலும் அவற்றையும் பிடிங்கி வீசிச்சென்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் கூட்டத்தைக் கலைக்க வனத்துறையினர் "ஆபரேஷன் ஜம்போ என்றஅதிரடித் திட்டத்தை உருவாக்கி யானைகளை விரட்டினர். ஆனால், மீண்டும் இந்த யானைகள் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+