For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உழவர் சந்தையை மூடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

உழவர் சந்தைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, சேலத்தில் விவசாயிகள் சனிக்கிழமைபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஆளுநர் உரையின்போது, திமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டஉழவர் சந்தைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல், வாங்குபவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது இந்த உழவர் சந்தை. இத்தகையஉழவர் சந்தைகளை மூடுவதால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, சனிக்கிழமை அதிகாலை 4.30மணிக்கே போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர் விவசாயிகள்.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் விவசாயிகள் அனைவரும் உழவர் சந்தையை மூடும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புதெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் வேறுபல ஊர்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X